திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என இப்போதும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். அஜித்தின் மனைவி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான 'அனியத்தி பிறாவு' படத்தின் மூலம் தான் இவரும் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மலையாள நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை வசப்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் தற்போது குஞ்சாக்கோ போபனும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.
மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தவகையில் சுமார் 25 வருடங்கள் கழித்து அரவிந்த்சாமியும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் படம் இது என்றும் சொல்லலாம். இந்த படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.