காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, தனது தாயின் வழியை பின்பற்றி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஹீரோ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக 'ஹ்ருதயம்' என்கிற படத்தில் நடிக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கிவரும் இந்தப்படத்தில் தனது படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்யாணி, “நான் சினிமாவுக்கு வந்தது மற்ற சிலரை போல அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அல்ல.. எனது சிறுவயது விடுமுறை தினங்கள் எல்லாமே என் தந்தையின் படப்பிடிப்பு தளத்தில் தான் கழிந்தன. என் தந்தை படப்பிடிப்பு சமயங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்ததை போல, வேறு ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. அப்போதே நானும் எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு சந்தோஷ மனுஷியாக வாழவேண்டும் என முடிவுசெய்தே இந்த துறைக்குள் நுழைந்தேன்.. ஹ்ருதயம் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட இந்த இரண்டு மாதங்களும் அப்போது நான் கண்ட அந்த கனவு நனவானதை நிஜமாகவே உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.