நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, தனது தாயின் வழியை பின்பற்றி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஹீரோ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக 'ஹ்ருதயம்' என்கிற படத்தில் நடிக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கிவரும் இந்தப்படத்தில் தனது படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்யாணி, “நான் சினிமாவுக்கு வந்தது மற்ற சிலரை போல அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அல்ல.. எனது சிறுவயது விடுமுறை தினங்கள் எல்லாமே என் தந்தையின் படப்பிடிப்பு தளத்தில் தான் கழிந்தன. என் தந்தை படப்பிடிப்பு சமயங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்ததை போல, வேறு ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. அப்போதே நானும் எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு சந்தோஷ மனுஷியாக வாழவேண்டும் என முடிவுசெய்தே இந்த துறைக்குள் நுழைந்தேன்.. ஹ்ருதயம் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட இந்த இரண்டு மாதங்களும் அப்போது நான் கண்ட அந்த கனவு நனவானதை நிஜமாகவே உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.