கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
கி.பி.1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அய்யா வைகுண்டர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் பிற்காலத்தில் ஆன்மீக குருவாக மாறினார். அய்யாவழி என்ற பெயரில் அவரை பல லட்சம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை தற்போது சினிமா ஆகிறது. ஒரு குடைக்குள் என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை பொன் செல்வராஜ், விஷ்ணுவதி, உதயகுமார், சுனிதா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வைகுண்டர் வேடத்தில் ஆனந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருடன் மேக்னா ராஜ், மாஸ்டர் தினேஷ், நிரோஷா, கருத்தம்மா ராஜஸ்ரீ, இளவரசு நடிக்கிறார்கள். வி.ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவா இசை அமைக்கிறார். கே.எல். உதயகுமார் இயக்குகிறார்.
இதில் வைகுண்டரின் அவதாரம், அவர் பக்தர்களுக்கு அருளிய அற்புதங்கள், அவரது முழு வாழ்க்கை இடம் பெறுகிறது. கன்னியாகுமாரி மாவட்டத்தை சுற்றி படப்பிடிப்பு நடக்கிறது.