2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு பொங்கல் முதல் தியேட்டர்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்குக் காரணமாக 'மாஸ்டர்' படம் இருந்தது.
அதற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வசூலைப் பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் 'பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு மட்டும் மிகக் குறைவான ரசிகர்கள் இன்று காலை காட்சிக்கு வந்திருக்கிறார்கள். மற்ற படங்களுக்கு ரசிகர்கள் வராத காரணத்தால் பல ஊர்களில் காலைக் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். மதியக் காட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.
பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தியேட்டர்களில் போய்ப் பார்க்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சில படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை. அப்படிப்பட்ட படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதை விட ஓடிடி தளத்தில் வெளியிட்டாலாவது மக்கள் பார்ப்பார்கள்.
கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிவிட்டது. இனி, சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.