டிக் டாக்கில் கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்த இலக்கியா இப்போது நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். துரைராஜ் இயக்கும் இப்படத்தில் அருண்குமார் நாயகனாக நடிக்க இவர்களுடன் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள். அடர்ந்த காடுகளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. துரை ராஜன் இசையமைக்கிறார்.
"தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை. வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையில் வெளியாக உள்ளது''. என்கிறார் இயக்குனர் துரைராஜ்.