கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் ஒதுங்கினார். இதனால், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலரும், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம், எப்போதும் போல் செயல்படும். மற்ற கட்சிகளுக்கு போக விரும்புவோர், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என, ரஜினி அறிவித்தார். இதையடுத்து, ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுனமூர்த்தி, புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜுனமூர்த்தி கட்சி துவக்கினால், அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், மன்ற மாவட்ட செயலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், வரும் சட்டசபை தேர்தலில், ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கப்போவதாக வரும் செய்தியும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.