‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் ஒதுங்கினார். இதனால், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலரும், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம், எப்போதும் போல் செயல்படும். மற்ற கட்சிகளுக்கு போக விரும்புவோர், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என, ரஜினி அறிவித்தார். இதையடுத்து, ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுனமூர்த்தி, புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜுனமூர்த்தி கட்சி துவக்கினால், அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், மன்ற மாவட்ட செயலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், வரும் சட்டசபை தேர்தலில், ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கப்போவதாக வரும் செய்தியும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.