கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரை அடுத்த கோலார் தங்கவயலில் நடத்த திட்டமிட்டனர். அதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கவில்லை.
இதனால் படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரிகணியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும், அதை சுற்றியுள்ள காடுகளிலும் படப்பிடிப்பபை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலால் இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை.
தற்போது சலார் படத்தின் படப்பிடிப்புக்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானா காடுகளை வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படும் சினிமாவுக்கு பயன்படுத்த அனுமதிக் க மாட்டோம். வெளியேறுங்கள் என நக்சலைட்டுகள் படத் தயாரிப்பு தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ராமகுண்டம் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.