'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள இசை அமைப்பாளர் தினா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
தலைவராக தினாவும், ஜோனா பக்தகுமார் பொதுச் செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் அதிகாரிகளாக இயக்குனர்கள் டி.கே.சண்முகசுந்தரமும், ரமேஷ் பிரபாகரனும் பணியாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (2ம் தேதி) சங்க கலையரங்கில் நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.