மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள இசை அமைப்பாளர் தினா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
தலைவராக தினாவும், ஜோனா பக்தகுமார் பொதுச் செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் அதிகாரிகளாக இயக்குனர்கள் டி.கே.சண்முகசுந்தரமும், ரமேஷ் பிரபாகரனும் பணியாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (2ம் தேதி) சங்க கலையரங்கில் நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.