ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி வருகிறார். கோட்டா நீலிமா எழுதிய ஷூஸ் ஆப் தி டெட் நாவலை படமாக்க இருக்கிறார் வெற்றி மாறன். சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படமும், சூரி நடிக்கும் படமும் நாவலை அடிப்படையாக கொண்டதே. கட்டில் என்ற நாவலும் படமாகி உள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு நாவல் படமாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்கிற நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கி தயாரிக்க இருக்கிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.