ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சுரேஷ்கோபி, அதன்பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.. இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படமாக 'ஒத்தக்கொம்பன்' என்கிற படம் உருவாக இருக்கிறது.
பிரமாண்டமான படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் தான் இயக்கவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலின் புலி முருகன், திலீப்பின் ராம்லீலா உள்ளிட்ட நூறு கோடி வசூலித்த பிரமாண்ட படங்களை தயாரித்த தோமிச்சன் முளக்குப்பாடம் என்பவர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சுரேஷ்கோபியை சந்தித்த தயாரிப்பாளர் தோமிச்சன் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இயக்குனரும் தானும் சேர்ந்து சுரேஷ்கோபியை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.