சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சுரேஷ்கோபி, அதன்பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.. இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படமாக 'ஒத்தக்கொம்பன்' என்கிற படம் உருவாக இருக்கிறது.
பிரமாண்டமான படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் தான் இயக்கவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலின் புலி முருகன், திலீப்பின் ராம்லீலா உள்ளிட்ட நூறு கோடி வசூலித்த பிரமாண்ட படங்களை தயாரித்த தோமிச்சன் முளக்குப்பாடம் என்பவர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சுரேஷ்கோபியை சந்தித்த தயாரிப்பாளர் தோமிச்சன் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இயக்குனரும் தானும் சேர்ந்து சுரேஷ்கோபியை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.




