நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் கே.வி.குகன். குஷி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு நியூ, மொழி, முனி, வெள்ளித்திரை, தோனி, பெங்ளூரு நாட்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
10 வருடங்களுக்கு முன்பு இனிது இனிது என்ற படத்தை இயக்கினார். இது ஹேப்பி டேஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு 118 என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்த திரில்லர் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. பல தென்னிந்திய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டது.
தற்போது “WWW (who, where, why)” எனும் தலைப்பில் புதிய படத்தை இயக்குகிறார். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.
படம் பற்றி கே.வி.குகன் கூறியதாவது: இந்த படம் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சர்யபடுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் கதைப்போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக அமைந்து இருக்கும். எனது முதல் தெலுங்கு மொழி படமாக வெளியான 118 படத்திற்கு, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை கொடுத்துள்ளது.
118 திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்ட பகுதிகளிலும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தான் இரு மொழிகளிலும், ஒருசேர படத்தை எடுப்பதற்கான உத்வேகத்தை எனக்கு தந்துள்ளது. தியேட்டரில் இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறேன். என்றார்.