'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது. ஈரான், துபாயில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும், விமான நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் சிறிய நாடு என்பதால் எல்லாமே அருகருகே இருப்பதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சோனல் சவுகான் தன்னை காப்பாற்றுமாறு பிரதமருக்கு மெயில் அனுப்பி உள்ளார்.
நடிகர் அஜித், கார் பந்தய முன் தயாரிப்பு, மற்றும் பயிற்சிக்காக தற்போது துபாயில் தங்கி உள்ளார். இதனால் அஜித்தின் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி கேட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். துபாயில் அஜித் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக அந்த விளக்கத்தில் அவர் கூறியுள்ளார்.




