'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு |
இட்லி கடை படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில், தான் சின்ன வயதில் கஷ்டப்பட்டது, தனது குடும்பம் பணப்பிரச்னைகளை சந்தித்தது. தான் அவமானங்களை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து பேசி வருகிறார் தனுஷ். இதுவரை எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், இப்படி குடும்ப விஷயங்களை தனுஷ் அதிகம் சொன்னது இல்லை. அவருடைய சின்ன வயது வாழ்க்கையில் இருந்து, அவரின் சொந்த ஊரான தேனி பக்கம் உள்ள கிராமத்தில் இருந்து கதை எடுத்து இருப்பதால் இதை சொல்வதாக தகவல்.
இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பணியாற்றவர் கஸ்துாரிராஜா. தனுஷ், அவர் அண்ணன் செல்வராகவன், சகோதரிகள் 2 பேர் என, குடும்பத்தில் மொத்தம் 4 குழந்தைகள். ஒரு கால கட்டம்வரை அந்த குடும்பம் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது. கஸ்துாரிராஜா இயக்குனர் ஆனபின் ஓரளவு வசதி ஆனார்கள். பின்னரும் சில படங்களால் அவர் கடனாளி ஆக, மீண்டும் கஷ்டப்பட்டார்கள்.
நடிகராக தனுஷ் ஜெயித்த பின்னரே அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் மீண்டார்கள். இப்போது தனுஷ், அவர் அண்ணன், சகோதரிகள் என அனைவருமே கோடீஸ்வரர்கள். ஆனாலும் பழசை மறக்காத தனுஷ், தான் பட்ட கஷ்டங்களை இத்தனை ஆண்டுகள் கழித்து மேடையில் சொல்லி வருகிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தின் சீன்களாக இருக்கிறது. இட்லி கடை படம் பலரை அழ வைக்கும் என்கிறார்கள்.