தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட சேலம் துரை சாமி ஐயா சுந்தரம், சுதந்திர போராட்ட வீரராகவும் நாடக நடிகராகவும் இருந்தார். தனது 12 வயது முதல் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக சபாவில் நடிக்க ஆரம்பித்தார். 1942 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது 'கவியின் கனவு' என்ற நாடகத்தை எழுதினார்.
பின்னர் சக்தி நாடக சபாவை தொடங்கி 'கவியின் கனவு' நாடகத்தை அரங்கேற்றினார். சுதந்திர இந்தியா பற்றிய இந்த நாடகம் 1500 முறை மேடைகளில் நடத்தப்பட்டது. நாடகத்தில் சிவாஜி கணேசன். எம் என் நம்பியார் எஸ்வி சுப்பையா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர்.
நாகப்பட்டினத்தில் அந்த நாடகம் நடைபெற்ற போது 'கவியின் கனவு ஸ்பெஷல் சிறப்பு ரயில்' திருச்சியில் இருந்து இயக்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்த நாடகம் பேசப்பட்டது. இதனை திரைப்படமாக்க எஸ்.டி.சுந்தரம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.