வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! |
ஜெமினி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த படம் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமான படம் 'மனம்போல மாங்கல்யம்'. இந்த படத்தை பி.புல்லையா இயக்கினார். அடிகபள்ளி ராமராவ் இசை அமைத்தார்.
ஜெமினி கணேசனுடன், சாவித்ரி, சுரபி பாலசரஸ்வதி, சந்தானலட்சுமி, கே.சாரங்கபாணி உள்படபலர் நடித்தனர்.
தீவிரமாக காதலிக்கும் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கு இடையில் ஜெமினி கணேசன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த படங்களில் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற படம் இது. இந்த படத்தில் நடிக்கும்போது வெறும் கே.கணேஷ் என்ற பெயரிலேயே நடித்தார். வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவர் என்ற விமர்சனம் ஜெமினி மீது இருந்தது. அதை மாற்றிய படம் இது.