சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
மேடை நிகழ்ச்சி துவங்கி, சின்னத்திரையில் ஜொலித்து அப்படியே வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர் ரோபோ சங்கர். காமெடியனாக பல படங்களில் நடித்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். சென்னை வளரசவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவு குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ரோபோ சங்கர் செப்., 16ம் தேதியன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப்போக்கு அதிகம் இருந்தது. மேலும் உள் உறுப்புகளும் செயல் இழந்து, வயிற்றுப் பகுதியிலும் தீவிரமான பிரச்னைகள் இருந்தன. அந்தச்சூழலில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்காமல் செப்., 18 அன்று இரவு 9:05 மணிக்கு உயிரிழந்தார்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.