சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை என் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான புலி, போட் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இவருக்கு எந்தவொரு முன்னனி நடிகர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை. இப்போது சிம்புதேவன் புதிதாக இயக்கவுள்ள படத்தை ஒரு மும்பை பைனான்சியர் உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விமல் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே அவர் ஒரு வெப்சீரிஸ் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.