காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? |

தெய்வீகமும், தேசியமும் எனது இரு கண்கள் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் . தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர்.
அவர் காலத்தில் சினிமா இருந்தது. ஆனால் அவர் சினிமா பார்த்ததில்லை. சினிமா மக்களுக்கு அவசியமில்லாத ஒன்று, இதனால் அவர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதினார். அப்படிப்பட்ட தேவர் பார்த்த ஒரே படம் 'ஔவையார்'.
சந்திரலேகாவைப் போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் 'ஔவையார்' படத்தை வாசன் தயாரித்தார். ஔவையார் பாத்திரத்தில் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். தன் வாழ்க்கையில் சினிமாவே பார்த்திராத தேவரை பார்க்க வைத்த படம் ஔவையார். சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். படம் அவருக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார் வாசன்.