ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

சென்னையில் நடந்த படையாண்ட மாவீரா பட விழாவில் பேசிய தங்கர்பச்சான் ''இன்று சமூக ஊடகங்கள் 24 மணி நேரமும் பசியோடு இயங்கிக்கொண்டு இருக்கிறது.  யாராவது எதையாவது பேசணும். அதை பெரிதாக்கி வருமானம் ஈட்ட வேண்டும் என்று அவர்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மனநோயாளிகள்  அதில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சொந்த பெயரில் இயங்குவது இல்லை. யாரோ சொல்லி, அரசியல்வாதிகள் சொல்லி அவர்கள் தாக்குகிறார்கள். கமென்ட் என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்.  
இந்த மண், மக்களுக்கு தேவையானதை தவிர்த்து, அதை முடக்கி வேறு திசைக்கு கொண்டு செல்கிறார்கள். சமூக ஊடகத்தில் இயங்குவது பெரிய தொழில் ஆகிவிட்டது. அவ்வளவு பணம் அதில் இருக்கிறது. எல்லாரும் டாக்டர் மாதிரி பேசுகிறார்கள். அனைத்தையும் தெரிந்தது மாதிரி பேசுகிறார்கள். ஏதாவது நல்லது செய்யணும்னு யாராவது வந்தால் அவர்களை தாக்கியே காலி பண்ணுகிறார்கள். எது சொன்னாலும் கமென்ட் போடுவார்கள். 
இப்போது நல்ல சினிமா வெற்றி பெறுவதை விட, மக்களுக்கு பலன் தராத படங்கள் ஓடுகிறது. அந்த படங்கள்தான் கொண்டாடப்படுகிறது. அவர்கள்தான் நேரத்தையும், பணத்தையும் பறிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல்வாதிகளை விட அதிக பணம் இருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களும் காரணம், நாலைந்து நடிகர்கள்தான் என்ன படம் வரணும்னு முடிவு செய்கிறார்கள். ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது இல்லை. இந்த படம் 400 கோடி வசூலா? 500 கோடி வசூலா என்று சிந்திக்க வைக்கிறார்கள்'' என்று பொங்கினார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            