ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' |
ஒரு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காட்டி' திரைப்படம் நாளை பான் இந்தியா வெளியீடாக வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய், சைதன்ய ராவ் மடாடி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் புரமோஷனுக்கு வருவதை அனுஷ்கா முழுவதுமாக தவிர்த்துவிட்டார். நேரில் வருவதற்கு அவர் ஏன் இவ்வளவு தயங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், படம் குறித்து பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் மட்டும் பேசி பேட்டி கொடுத்துள்ளார். மேலும், நேற்று ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் சாட்டிங் செய்துள்ளார்.
அனுஷ்கா புரமோஷனுக்கு வராததை படக்குழுவும் குறையாக சொல்லவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் கூட அது அனுஷ்காவின் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நேற்றைய எக்ஸ் சாட்டிங்கில் “படத்தின் கதையைக் கேட்டதும் பிரமித்துப் போய் விட்டேன். யெஸ் என்றோ, நோ என்றோ முதலில் சொல்லவில்லை,” என படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.