சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'மதராஸி'.
மதராஸி என தலைப்பு வைத்துள்ளதால் இந்தப் படம் மும்பை போன்ற இடங்களில் நடக்கும் கதையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களை மதராஸி என்றழைப்பது வழக்கம்.
ஆனால், படத்தின் கதை தமிழகத்தில்தான் நடக்கிறதாம். வில்லன் வித்யுத் ஜமால், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை மதராஸி என அழைப்பதால் படத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
மேலும், படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது, அது மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்தப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை எழுதினேன். இதன் தலைப்பு வித்தியாசமானது மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று நான் உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.




