நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரவிமோகன் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை இன்று துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: நான் கல்லூரி காலத்தில் ரவி மோகன், ஜெனிலியா படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. ரவிமோகன் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். எனக்கும் நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம். பல ஹீரோக்கள் பட நிறுவனம் தொடங்க வேண்டும். திறமைசாலிகளுக்கு களம் அமைத்து தர வேண்டும். அது அம்மா மாதிரியான பீலிங்.
இப்ப ஒரு படம் தயாரித்து கொண்டு இருக்கிறேன். அந்த படத்தை எடிட்டிங்கில் பார்த்து அவ்வளவு சந்தோசப்பட்டேன். தயாரிப்பு விஷயத்தில் நான் ரவிமோகனுக்கு சீனியர். என்னால் முடிந்த உதவிகளை வழங்க தயார். அவரின் இந்த கம்பெனியிலும் நடிக்க ரெடி. அவர் இன்றே அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன். பராசக்தி படத்தில் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன்..அவர் நிறைய பேசி இருக்கிறார். சுதா இயக்கும் அந்த ‛செட்' வேறு மாதிரி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் தனது தாயாரை போற்றும் விதமாக ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி, அந்தப் பாடலுக்கான வரிகளை அவரே எழுதியிருந்தார். நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா அந்த பாடலை பாடியுள்ளார். பின்னர் விழாவில் பாடகி கெனிஷா பேசுகையில், ‛‛ரவி மோகன் ஸ்டுடியோவில் நானும் ஒரு பங்காக இருப்பது பெருமையாக இருக்கு. ரவி எனக்கு அவரது அம்மா, அண்ணன் என்று நல்ல சொந்தங்களை கொடுத்து உள்ளார். ரவி என்ன சோகம் இருந்தாலும் வெளியில் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். கஷ்டத்தில் வரவர்களுக்கு துணை நிற்கிறீர்கள். அவரை கடவுளாக பார்க்கிறேன்'' என்றார்.