தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷ்ணம், இவர் நாடக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கண்ணாம்பா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதாவது இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இல்லறத்தில் இணைந்தனர்.
பின்னாளில் கண்ணாம்பா நடிகையாக உயர்ந்தார். நாகபூஷ்ணம் இயக்குனர் ஆனார். கணவரின் படங்களை தயாரிப்பதற்காக ஸ்ரீராஜேஷ்வரி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார் கண்ணாம்பா.
தமிழில் ஹரிச்சந்த்ரா, துளசி ஜலந்தர், நவஜீவனம், சவுதாமினி, ஏழை உழவன், லட்சுமி, நாக பஞ்சமி, சதி சாவித்ரி, தக்ஷாயணம், தாலி பாக்கியம் படங்களை தயாரித்தார். ஏராளமான தெலுங்கு படங்களையும் தயாரித்தார்.
திரைப்படத் தயாரிப்பால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த கண்ணாம்பா கடைசி காலத்தில் பொருளாதாரத்திற்கு சிரமமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.