டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது |
சரியான தமிழ் உச்சரிப்புக்கு புகழ் பெற்றவர் கண்ணாம்பா . 'மனோகரா' படத்தில் அவர் பேசிய 'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' என்ற வசனம் இன்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் அவரது தமிழ் வசன உச்சரிப்பால் ஒரு படம் தோல்வி அடைந்த வரலாறும் உண்டு. அது 1940ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீ கிருண்ணன் தூது'.
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை கண்ணாம்பா, அங்கு தனியாக ஒரு நாடக கம்பெனியும் நடத்தி வந்தார். அவர் தமிழில் அறிமுகமான படம்தான் 'ஸ்ரீ கிருஷ்ணன் தூது. மகாபாரத யுத்தம் நடந்தபோது பாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் இடையில் தூதராக செயல்பட்ட கிருஷ்ணரின் செயல்பாடுகளை மையமாக கொண்ட படம். ஆர்.பிரகாஷ் இயக்கிய இந்த படத்தில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனாகவும், கண்ணாம்பா திரவுபதியாகவும் நடித்தனர். விசலூர் சுப்ரமணிய பாகவதர் துரியோதனனாக நடித்தார். மோசன் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண செட்டியார் தயாரித்திருந்தார்.
அன்றைக்கு டப்பிங் வசதிகள் இல்லாததால் கண்ணாம்பாவே தமிழில் பேசி நடித்தார். அப்போது கண்ணாம்பாவுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்து பேசினார். அது தெலுங்கு உச்சரிப்பு போல இருந்தது. திரவுபதியின் சபதம்தான் படத்தின் முக்கிய பகுதி. திரவுபதிக்குதான் அதிக வசனம் அதனால் கண்ணாம்பாவின் தெலுங்கு பாணியிலான தமிழ் உச்சரிப்பபை மக்கள் ரசிக்கவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது. அதே கண்ணம்மாதான் பிற்காலத்தில் 'மனோகரா' படத்தை தன் தமிழ் வசனத்தால் வெற்றி பெற வைத்தார் என்பது தனி வரலாறு.