கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தெலுங்கு, மலையாள படங்களை இயக்கிய மணிரத்னத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பியவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி. அப்போது வெற்றிகரமான ஜோடிகளாக இருந்த அம்பிகா, ராதா, மோகன் இணைந்து நடிக்க அதற்கேற்ப ஒரு கதையை தயார் செய்து அதனை மணிரத்னம் இயக்க ஏற்பாடானது. இதற்கு மணிரத்னமும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு முன்னதாக அவர் 'பகல்நிலவு' படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்து வரும்வரை கோவை தம்பி காத்திருந்தார். பின்னர் மணிரத்னத்திற்கு அந்த கதையை இயக்க விருப்பமில்லை. அது ஒரு சாதாரண காதல் கதை. அதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்று கூறி 'மவுன ராகம்' படத்தின் கதையை சொன்னார். ஆனால் அந்த கதை கோவை தம்பிக்கு பிடிக்கவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மணிரத்னம் 'இதய கோவில்' படத்தை இயக்கினார். விருப்பமே இல்லாமல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை இயக்கினார். படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மணிரத்னம் விரும்பினார், ஆனால் கோவை தம்பி, ராஜ ராஜனை நியமித்தார்.
ஒரு வழியாக படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டது. பின்னாளில் இது குறித்து பேசிய மணிரத்னம், "இதயகோவில் மாதிரியான படங்களை இயக்க நான் சினிமாவிற்கு வரவில்லை" என்று கூறினார். கோவை தம்பி குறிப்பிடும்போது இதயகோவில் படத்தின் பட்ஜெட்டை மணிரத்னம் 3 மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.