ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா |

தெலுங்கு, மலையாள படங்களை இயக்கிய மணிரத்னத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பியவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி. அப்போது வெற்றிகரமான ஜோடிகளாக இருந்த அம்பிகா, ராதா, மோகன் இணைந்து நடிக்க அதற்கேற்ப ஒரு கதையை தயார் செய்து அதனை மணிரத்னம் இயக்க ஏற்பாடானது. இதற்கு மணிரத்னமும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு முன்னதாக அவர் 'பகல்நிலவு' படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்து வரும்வரை கோவை தம்பி காத்திருந்தார். பின்னர் மணிரத்னத்திற்கு அந்த கதையை இயக்க விருப்பமில்லை. அது ஒரு சாதாரண காதல் கதை. அதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்று கூறி 'மவுன ராகம்' படத்தின் கதையை சொன்னார். ஆனால் அந்த கதை கோவை தம்பிக்கு பிடிக்கவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மணிரத்னம் 'இதய கோவில்' படத்தை இயக்கினார். விருப்பமே இல்லாமல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை இயக்கினார். படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மணிரத்னம் விரும்பினார், ஆனால் கோவை தம்பி, ராஜ ராஜனை நியமித்தார்.
ஒரு வழியாக படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டது. பின்னாளில் இது குறித்து பேசிய மணிரத்னம், "இதயகோவில் மாதிரியான படங்களை இயக்க நான் சினிமாவிற்கு வரவில்லை" என்று கூறினார். கோவை தம்பி குறிப்பிடும்போது இதயகோவில் படத்தின் பட்ஜெட்டை மணிரத்னம் 3 மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.




