சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பாலிவுட்டில் தற்போதும் முன்னணி நடிகை வரிசையில் இருந்துகொண்டு பரபரப்பு செய்திகளில் இடம் பிடிப்பவர் நடிகை வித்யா பாலன். ஒரு காலகட்டத்தில் அவர் நடிக்கும் படங்கள் அவரைப் பற்றி பரபரப்பாக பேச வைத்தன. சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களும் மீடியாக்களில அவர் கொடுக்கும் பேட்டிகளும் ரசிகர்களிடம் அவரை பற்றி தொடர்ந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யா பாலன் பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகருடன் மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை படமாக்குவதற்கு சற்று முன்பாக தான் அவர் சைனீஸ் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரத்திலேயே அந்த காட்சியில் அவர் நடிக்க வந்தபோது அந்த உணவு வாடை அப்படியே இருந்தது. அவரிடம் நீங்கள் பிரஷ் பண்ணவில்லையா என்று கேட்டதற்கு, எதற்காக என்று திருப்பி கேட்டார். உடனே அவரிடம் உங்களுக்கு பார்ட்னர் என யாராவது இருக்கிறாரா என்று கேட்டேன். அதன்பிறகு தான் அந்த நடிகர் புரிந்துகொண்டு சென்று பிரஷ் பண்ணி விட்டு வந்து நடித்தார்” என்கிற ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் வித்யா பாலன்.