சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி அதன்பிறகு நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். மார்கன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தி திருமகன் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது காலில் செருப்பு அணியாமல் இருப்பது குறித்து அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், காலில் செருப்பு அணியாமல் நடக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. முக்கியமாக இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சினிமா பிரபலம் என்பதால் விமானத்தில் பயணிப்பது, ஏசி காற்றில் உறங்குவது, பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. நாமே நினைத்தாலும் அதை எல்லாம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் என் காலில் செருப்பே அணியாமல் நடந்து செல்கிறேன். இதன் மூலம் மனசுக்கு நிறைவாக இருப்பது மட்டுமின்றி என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.