மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி அதன்பிறகு நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். மார்கன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தி திருமகன் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது காலில் செருப்பு அணியாமல் இருப்பது குறித்து அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், காலில் செருப்பு அணியாமல் நடக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. முக்கியமாக இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சினிமா பிரபலம் என்பதால் விமானத்தில் பயணிப்பது, ஏசி காற்றில் உறங்குவது, பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. நாமே நினைத்தாலும் அதை எல்லாம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் என் காலில் செருப்பே அணியாமல் நடந்து செல்கிறேன். இதன் மூலம் மனசுக்கு நிறைவாக இருப்பது மட்டுமின்றி என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.