பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
1990களில் பிசியான ஹீரோவாக இருந்தவர் சரவணன். சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் 'பருத்தி வீரன்' படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்து அதன் பிறகு 'பருத்தி வீரன்' சரவணன் என்றே அழைக்கப்படுகிறார்.
தற்போது வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர் தற்போது 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடரில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார். சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார், பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது, "சினிமாவில் 35 ஆண்டுகளை கடந்த எனக்கு, இந்த வெப் தொடர் மீண்டும் கதாநாயகன் அரிதாரம் கொடுத்துள்ளது. ரசிகர்களை ஈர்க்கும்படி எனது பயணம் இருக்கும்'' என்றார்.