கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் பறந்து போ. இதில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குனர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குனர் ராமிற்கும் அவரது பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
பறந்து போ படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.4.1 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.