கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ரஜினி நடிப்பில் ஏராளமான படங்களை தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். மலையாளத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' படம் 3டியில் வெளியானது. அது போன்ற ஒரு படத்தை தயாரிக்க விரும்பியது தேவர் பிலிம்ஸ். இதற்கான கதையை தேடிய போது கன்னடத்தில் வெளிவந்த 'நம்ம பூமி' என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. 'அன்னை பூமி' என்ற பெயரில் கதை உருவானது.
இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தேவர் பிலிம்ஸ் ரஜினியை கேட்டபோது அவர் உறுதியாக மறுத்து விட்டார். காரணம் 3டி படங்கள் மீது ரஜினிக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. 3டி படங்கள் ஒரு சினிமாவின் ஆன்மாவை குறைத்து விடும் என்று அவர் கருதினார். மக்கள் காட்சிகளைத் தான் ரசிப்பார்கள் கதையை கைவிட்டு விடுவார்கள் என்பது அவரது கருத்தாக இருந்தது. இதன் காரணமாக இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்து விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ரஜினியும் தேவர் பிலிம்சும் பிரிந்ததாக சொல்வார்கள்.
இதனால் தேவர் பிலிம்ஸ் இந்த படத்தின் நாயகனாக விஜய்காந்தை தேர்வு செய்தது. அவருடன் ராதாரவி, நளினி, கவுண்டமணி விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆர்.தியாகராஜன் இயக்கினார், இளையராஜா இசையமைத்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்த படம் தோல்வி அடைந்தது.