கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி 'தக்லைப்' படத்தில் இணைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ''எங்களது கூட்டணியில் நாயகன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த தக்லைப் படத்தை இன்னொரு நாயகனாகவே எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்க விரும்பவில்லை. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை கொடுப்பதற்கே திட்டமிட்டோம். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருக்க, நாங்கள் இன்னொரு மாதிரியாக இந்த தக்லைப் படத்தை கொடுத்திருந்தோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம்.
அவர்கள் நாயகனை கருத்தில் கொள்ளாமல் இந்த தக்லைப் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்திருக்கும். என்றாலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார் மணிரத்னம்.