ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛படை தலைவன்'. யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஏற்கனவே இரண்டு முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகமெங்கும் அடுத்தவாரம், ஜூன் 13ல் 500 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ், எல்.கே.சுதீஷ் கைப்பற்றி உள்ளார்.