விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் | லோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது ஏன் ? ; இயக்குனர் பஷில் ஜோசப் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் பேரழகனாக விளங்கினார். ஆனால் ஆரம்ப காலத்தில் மெலிந்த தேகம், ஒட்டிய கன்னமாக மிகச் சாதாரணமாக இருந்தார். அதற்கு ஒரு சிறிய சம்பவத்தை கூறலாம்.
பாரதிதாசனின் 'எதிர்பாராத முத்தம்' என்ற நாவலை சினிமாவாக எடுக்க விரும்பிய என்.எஸ்.கிருஷ்ணன், அதை திரைக்கதையாக எழுதி வைத்திருந்தார். அதனை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் படமாக தயாரிக்க விரும்பினார். அதற்கு பாரதிதாசனும், என்.எஸ்.கிருஷ்ணனும் ஒப்பு கொண்டனர்.
படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்குவதாக முடிவானது. கதையை படித்த டங்கன் இந்த கதைக்கு அழகான நாயகன் தேவை என்று கூறினார். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களை வரிசையாக நிற்க வைத்து சிறைச்சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்துவது போன்று நடத்தினார் டங்கன். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி.நரசிம்ம பாரதி ஆகியோர் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரிடமும் அவர்களை பற்றி விசாரிக்கும்போது அவர்கள் தங்கள் பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும்போது பி.வி.நரசிம்ம பாரதி மட்டும் 'நான் சிங்கம்' என்றார். அதை கேட்டு கலகலவென சிரித்த டங்கன். 'சிங்கத்திற்கு எப்படி காதல் வரும், இது காதல் படமாச்சே' என்றார். 'காதல் வரும்போது சிங்கமும் மானாகும்' என்றார் நரசிம்ம பாரதி. இவர்தான் ஹீரோ என்று அறிவித்தார் டங்கன்.
படத்திற்கு 'பொன்முடி' என்று டைட்டில் வைக்கப்பட்டது. படத்தில் நரசிம்ம பாரதியும், மாதுரி தேவியும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தனர். இதனாலேயே படம் பெரிய வெற்றி பெற்றது. டங்கன் தமிழ் கலாச்சாரத்தை கெடுப்பதாக விமர்சனமும் எழுந்தது.
நரசிம்ம பாரதி, மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார். சிவாஜி நடித்த இரண்டாவது படத்தின் (திரும்பிப்பார்) நாயகன் நரசிம்ம பாரதிதான். சிவாஜி வில்லனாக நடித்தார். நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்றார் நரசிம்ம பாரதி .
9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். மதுரை, சவுராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த நரசிம்ம பாரதிதான் டி.எம்.சவுந்தர்ராஜனை பாடகராக அறிமுகப்படுத்தினார். காரணம் இருவரும் மதுரை பாய்ஸ் கம்பெனியில் நடிகராக இருந்தவர்கள். நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்த நரசிம்ம பாரதி சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் பல குடும்ப சூழ்நிலை காரணமாக மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி ஒரு கட்டத்தில் ரசிகர்களால் மறக்கப்பட்டார்.