முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பெரிய பட்ஜெட்டில் சரித்திர படமாக தயாராகி உள்ளது. இது பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படம். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன், அட்வென்ச்சர் படமாக எடுக்கப்பட்டுள்ளத. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இதில் பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில், நோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்கிறார் . இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஜூன் 12ம் தேதியன்று வெளியாகிறது.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு நேர்காணலில், "இந்த படத்தின் கிளைமாக்ஸிற்காக மட்டும் ரூ.20 கோடிக்கு கிராபிக்ஸ் காட்சியை உருவாக்கியுள்ளோம். இந்த கிராபிக்ஸ் பணிகளை ஆர்.ஆர்.ஆர், 2.0 படங்களில் பணியாற்றிய நிறுவனம் உருவாக்கி உள்ளது" என தெரிவித்துள்ளார்.




