புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் |
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96'. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.