படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கமலின் தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49வது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.
இதனால் இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ஆகிய படங்களின் நிலைமை இடியாப்ப சிக்கலில் உள்ளது. டான் பிக்சர்ஸ் தரப்பில் சிம்பு 49 படத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இட்லி கடை, பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வாங்க. பிறகுதான் கால்ஷீட் தருவதாக சிம்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சிம்பு 49 படம் உருவாவதில் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உடனடியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.