இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! |
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2002ம் திருமணம் செய்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டில் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இருவரும் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்தும் பெற்றனர். இருவரும் அவரவர் பணியில் உள்ளனர். மகன்கள் அப்பா, அம்மா இருவரிடமும் வளர்கின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர். இந்த போட்டோவை தனுஷ் அவரது வலைதளத்தில் பகிர்ந்து, ‛‛பெருமைமிக்க பெற்றோர்'' என குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பின் தங்களது மகனின் பள்ளி விழாவின் மூலம் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே ரஜினி தனது எக்ஸ் தளத்தில் இந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛என் அன்பான பேரன் முதல் மைல்கல்லை கடந்துவிட்டான். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.