நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துள்ளார். அவர் மீது அவருடைய மேனேஜர் விபின் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த 'நரிவேட்டா' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விபின். அதனால், கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரது மேனேஜர் விபினை வார்த்தைகளாலும், அடித்தும் காயப்படுத்தியுள்ளார் என புகாரில் உள்ளதாம்.
புகார் அளித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த விபின் இது பற்றி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உன்னி முகுந்தன் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. மலையாள சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு பொறாமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க்கோ' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.