'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துள்ளார். அவர் மீது அவருடைய மேனேஜர் விபின் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த 'நரிவேட்டா' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விபின். அதனால், கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரது மேனேஜர் விபினை வார்த்தைகளாலும், அடித்தும் காயப்படுத்தியுள்ளார் என புகாரில் உள்ளதாம்.
புகார் அளித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த விபின் இது பற்றி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உன்னி முகுந்தன் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. மலையாள சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு பொறாமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க்கோ' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.