ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரட்டையர்கள். இசை கற்றது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம். 1914ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 1976ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார்.
அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சி மூலம் வசூலான ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைக்கு பல கோடி. 1979-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
''மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்க வேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும், ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்' என்று மெல்லிசை மன்னர்கள் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் 46வது நினைவு நாள் இன்று.