23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |
தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி தொடர்ந்து படங்களின் தோல்விக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், இப்போதைய தமிழ் சினிமாவின் போக்கு எப்படி வீழ்ச்சிக்கு வித்திடுகிறது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜின் என்கிற படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் ஆர்கே செல்வமணி. அப்போது அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலான வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஒரு இயக்குனரிடம் நேரடியாக கதை கேட்பது என்பது குறைந்து விட்டது. அவரிடம் மேனேஜர்களாக இருப்பவர்களும் உதவியாளர்களும் தான் கதையை கேட்கிறார்கள். இதனால் இயக்குனருக்கும் ஹீரோவுக்குமான ஒரு நட்பு, உறவு துண்டிக்கப்படுகிறது.
தவறான புரிதல் உருவாகிறது. இதை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். தங்களது உதவியாளர்கள், மேனேஜர்கள் மூலமாக கதை கேட்பதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதாசிரியர்களிடம் நேரடியாக அமர்ந்து முழு கதையை கேட்டால் படத்தின் தோல்வியையும் தவிர்க்கலாம். தங்களது திரையுலக பயணத்திலும் தொடர்ந்து வெற்றியை சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.