‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார். இவர்களின் நெருக்கத்தை குறிப்பிட்டு, ‛அப்பா என்பது வார்த்தை அல்ல பொறுப்பு'' என விமர்சித்தார் ஆர்த்தி ரவி. பதிலுக்கு ரவி மோகன், ‛‛என்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்தனர், மனைவியை மட்டுமே பிரிந்தேன், பிள்ளைகளை அல்ல'' என தெரிவித்தார்.
இதற்கிடையே ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, ‛‛நான் வாங்கிய கடனுக்கு ஒருபோதும் ரவியை நான் பொறுப்பேற்க கூறியதில்லை. அவர் சொல்வது முற்றிலும் பொய்'' என தெரிவித்திருந்தார்.
இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாடகி கெனிஷா இன்ஸ்டாவில், ‛‛பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய துவக்கத்தை நோக்கி பயணக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷாவின் இந்த பதிவு வைரலாக, என்ன மாதிரியான விடியல் பயணம் இது... என ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.