ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார். இவர்களின் நெருக்கத்தை குறிப்பிட்டு, ‛அப்பா என்பது வார்த்தை அல்ல பொறுப்பு'' என விமர்சித்தார் ஆர்த்தி ரவி. பதிலுக்கு ரவி மோகன், ‛‛என்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்தனர், மனைவியை மட்டுமே பிரிந்தேன், பிள்ளைகளை அல்ல'' என தெரிவித்தார்.
இதற்கிடையே ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, ‛‛நான் வாங்கிய கடனுக்கு ஒருபோதும் ரவியை நான் பொறுப்பேற்க கூறியதில்லை. அவர் சொல்வது முற்றிலும் பொய்'' என தெரிவித்திருந்தார்.
இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாடகி கெனிஷா இன்ஸ்டாவில், ‛‛பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய துவக்கத்தை நோக்கி பயணக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷாவின் இந்த பதிவு வைரலாக, என்ன மாதிரியான விடியல் பயணம் இது... என ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.