பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் முன்னணி தொலைக்காட்சி நடிகை தீபிகா கர்கர். சில படங்களிலும் நடித்துள்ளார், இசை ஆல்பங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது தனது இரண்டாவது கணவர் சோயப் இப்ராஹிமோடு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ருஹான் என்ற மகள் இருக்கிறாள்.
தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காஷ்மீருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றார். அங்கு எடுத்த வீடியோக்கள், படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய இதே இடத்தில் அதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை தீபிகா தனது குழந்தை, கணவருடன் இருந்துள்ளார். அவர்கள் திட்டமிட்டதற்கு முன்பாகே அந்த இடத்தை விட்டு சென்றதால் தீபிகா குடும்பம் உயிர் தப்பியது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக தான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றோம். இந்த சம்பவத்தால் மனம் பதைக்கிறது. இன்னும் நாங்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என்றார்.
தொடர்ந்து தீபிகா கக்கர் - சோயப் தம்பதி காஷ்மீர் சுற்றுப்பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு மும்பை திரும்புகிறார்கள். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு நடிகர் - நடிகைகள் உள்பட திரையுலகினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.




