எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் நடித்து வருபவர் மகேஷ்பாபு.
அப்படி அவர் நடித்த ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் படம் ஒன்றிற்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகச் சொல்லி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல். அந்த பணம் குறித்துத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம்.
மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்த அந்த நிறுவனத்தை அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. அதில் கிடைத்த கணக்குககளில் மகேஷ்பாபுவுக்கு தந்த தொகை விசாரணையில் சிக்கியிருக்கிறதாம்.