விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. மார்ச் 27ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள்.
ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த பி4யு என்ற நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் படத்திற்கான தடையை வாங்கியது. படத்தின் சம்பள பாக்கிக்காக நாயகன் விக்ரமிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்ததற்குத்தான் வழக்கு என்றார்கள்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக படம் காலை காட்சியில் வெளியாகாமல் மதியத்திற்கு மேல் தான் வெளியானது. தனக்குக் கொடுக்கப்பட்ட உரிமையை விக்ரம் திருப்பிக் கொடுத்துவிட்டதால் படம் வெளியானது. தன் சம்பள பாக்கியைப் பற்றிக் கவலைப்படாமல் விக்ரம் திருப்பிக் கொடுத்ததை படத்தை வாங்கியவர்களும், திரையுலகினரும் பாராட்டினார்கள்.
தற்போது ஓடிடி உரிமை சிக்கல்கள் பேசித் தீர்த்து அதன் வியாபாரத்தை முடித்துள்ளார்கள். அமேசான் பிரைமில் இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதால் 'வீர தீர சூரன்' முதல் பாகம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா என விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.