மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. மார்ச் 27ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள்.
ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த பி4யு என்ற நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் படத்திற்கான தடையை வாங்கியது. படத்தின் சம்பள பாக்கிக்காக நாயகன் விக்ரமிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்ததற்குத்தான் வழக்கு என்றார்கள்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக படம் காலை காட்சியில் வெளியாகாமல் மதியத்திற்கு மேல் தான் வெளியானது. தனக்குக் கொடுக்கப்பட்ட உரிமையை விக்ரம் திருப்பிக் கொடுத்துவிட்டதால் படம் வெளியானது. தன் சம்பள பாக்கியைப் பற்றிக் கவலைப்படாமல் விக்ரம் திருப்பிக் கொடுத்ததை படத்தை வாங்கியவர்களும், திரையுலகினரும் பாராட்டினார்கள்.
தற்போது ஓடிடி உரிமை சிக்கல்கள் பேசித் தீர்த்து அதன் வியாபாரத்தை முடித்துள்ளார்கள். அமேசான் பிரைமில் இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதால் 'வீர தீர சூரன்' முதல் பாகம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா என விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.