வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சில நடிகர்கள் சில கேரக்டர்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக இருந்தால், தொடர்ந்து பெரும்பாலும், அந்த கேரக்டர்களிலேயே அவர்கள் நடிப்பார்கள். குறிப்பாக ரியாஸ்கான் மாதிரியான சிலர் போலீசாகவே நடிப்பார்கள், சிலர் டாக்டராகவே நடிப்பார்கள், சிலர் கல்லூரி ஆசிரியராகவே நடிப்பார்கள்.
இப்படி, தான் நடித்த பெரும்பாலான படங்களில் நாரதராக நடித்தவர் நாகர்கோவில் கே.மகாதேவன். கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்த நடிகர் இவர். அடிப்படையில் எழுத்தாளரான மகாதேவன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்தார். பின்னாளில் நாடக நடிகராக இருந்தார். நாடகங்களிலும் நாரதர் வேடத்தில் நடித்தார்.
'பக்த கௌரி' என்ற படத்தில் அறிமுகமான இவர் சினிமாவிலும் நாரதராகவே நடித்தார். கங்காவதார், பிரபாவதி, ஸ்ரீவள்ளி, ஏகம்பவாணன், சக்ரதாரி, காமவல்லி, ஸ்ரீகிருஷ்ணா துலாபாரம், பாரிஜாதம் உள்ளிட்டவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
நாரதராக அதிக படங்களில் நடித்ததால் நாகர்கோவில் மகாதேவன் என்ற அவரது பெயர் நாளடைவில் 'நாரதர் மகாதேவன்' என்று மாறியது. 'என் மனைவி' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நாயகனாக நடித்தார்.