லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா | அஜித், கமல்ஹாசன் வழியில் நயன்தார : அடுத்தது யார் ? | படக்குழு மட்டும் கொண்டாடிய 'டிராகன்' சக்சஸ் பார்ட்டி | இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி ; நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார் | ராஜமவுலி-மகேஷ்பாபு படம் ; தன்னையறியாமல் உறுதிப்படுத்திய பிரித்விராஜின் அம்மா | ஏப்ரல் 4ல் ஓடிடியில் வெளியாகும் 'டெஸ்ட்' | அஷ்வத் மாரிமுத்துவை 'அட்வான்ஸ்' ஆக நம்பிய சிம்பு | மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா | டிவியை தொடர்ந்து ஓடிடியிலும் 'மார்கோ' ஒளிபரப்ப தடை? | மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் தற்காலிக தள்ளிவைப்பு |
பிரபல நடிகை ஷகிலா சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைக்கும் காட்சி குறித்து சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார். இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். கவர்ச்சி நடிகையான ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் நல்லதொரு மரியாதையை பெற்று வருகிறார். ஆனாலும் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் அண்மையில், இயக்குநர் நவீன் குமார் இயக்கிய கடைசி தோட்டா புகைப்படத்தில் வனிதா புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்து ஷகிலாவிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஷகிலா, ''வனிதாவை தெய்வமா பாக்குறீங்களா? இல்ல குடும்ப பெண்ணா பாக்குறீங்களா? இவ்வளவு நாள் வனிதாவை குடும்ப பெண்ணா பாத்தீங்களா? இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாதா?'' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நிரூபர் விஜய் சார் சிகரெட் பிடித்தாலே அதை பலரும் கண்டிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ சிகரெடி பிடிப்பதை திரைப்படத்தில் காட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்படியிருக்கையில் பெண்கள் சிகரெட் பிடித்தால் திட்டமாட்டார்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷகிலாவோ, ''திட்டினால் திட்டட்டும். அப்படியென்றால் தானே நாங்கள் பாப்புலர் ஆக முடியும்'' என பொருப்பில்லாமல் பதில் கூறியுள்ளார். ஷகிலாவின் இந்த சர்ச்சை மிகுந்த கருத்தானது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.