மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
'எந்திரன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் சொத்துக்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. சுமார் 10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை, பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி 17 பிப்ரவரி அன்று சென்னை, அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய விவகாரம் இந்தியத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இயக்குனர் ஷங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து தகவல் இல்லை. எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தமடைகிறேன். குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது. அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். மறுபரிசீலனை செயயவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.