பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவர் ரஞ்சன். பணக்கார வீட்டு செல்ல மகன், நிறைய படித்தவர், குதிரையேற்றம், வாள் சண்டை, குத்து சண்டை, விமான பைலட் என நிறைய தகுதிகள் அவரிடம் இருந்தது.
ரஞ்சனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஞ்சன் ஹீரோவாகவும், எம்.ஜி.ஆர் வில்லனாகவும் நடித்த படம்தான் 'சாலிவாகனன்'. இதில் சாலிவாகனனாக ரஞ்சனும், விக்ரமாதித்தனாக எம்ஜிஆரும் நடித்தனர்.
இருவரும் வாள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி இருந்தது. இதில் முறைப்படி வாள் சண்டை கற்ற ரஞ்சனுக்கு எதிராக எம்ஜிஆர் நாடகத்தில் கற்றதை வைத்து மோதினார். இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். ரஞ்சன் மூர்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துவதாக எம்ஜிஆரும், எம்ஜிஆர் மூர்க்த்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துதாக ரஞ்சனும் மாறி மாறி இயக்குனரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு சண்டை இயக்குனர் சொல்படி மட்டுமே நடந்து கொள்வது என்று முடிவாகி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
பி.என்.ராவ் இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, கே.எல்.வி.வசந்தா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.எஸ்.பாலையா மற்றும் பலர் நடித்தனர். நாகர்கோவில் கே.மகாதேவன் இசை அமைத்தார். இது 1944ல் தயாரிக்கப்பட்டு 1945ன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.