ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது, ''நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு அஜித் சாருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன். அது நடைபெறும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.