பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது, ''நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு அஜித் சாருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன். அது நடைபெறும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.