‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருந்த படம் 'புறநானூறு'. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இருந்தாலும் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட 'புறநானூறு' படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் படம்தான் 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. நேற்று இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 1960களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றத்தையும், அவரது கதாபாத்திரத்தையும் நேற்றைய டீசர் மூலம் பார்த்த ரசிகர்கள் 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கோ மிகப் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யா 'மிஸ்' செய்திருக்கக் கூடாது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஒருவேளை ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் 'பராசக்தி' படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் இருக்கிறது.




