கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருந்த படம் 'புறநானூறு'. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இருந்தாலும் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட 'புறநானூறு' படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் படம்தான் 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. நேற்று இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 1960களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றத்தையும், அவரது கதாபாத்திரத்தையும் நேற்றைய டீசர் மூலம் பார்த்த ரசிகர்கள் 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கோ மிகப் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யா 'மிஸ்' செய்திருக்கக் கூடாது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஒருவேளை ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் 'பராசக்தி' படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் இருக்கிறது.